அந்த இரண்டு கணக்காய்வு நிறுவனங்களையும் நீக்கியது நஜிப்தான் என்றும் வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது. 2009இல் பெட்ரோ சவுதி நிறுவனத்துடனான வணிகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து கேள்விகள் எழுப்பியதாலேயே அந்த நிறுவனங்கள் நீக்கப்பட்டன என்றும் அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது.
“ஏன் இந்த கணக்குத் தணிக்கை நிறுவனங்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டாலும், இதுவரை அவை இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை?” என்றும் வால் ஸ்ட்ரீட் கேள்வி எழுப்பியுள்ளது.
நஜிப் 1எம்டிபி ஆலோசகர்கள் வாரியத்தின் தலைவர் என்பதோடு, இந்த கணக்காய்வு நிறுவனங்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் நிதியமைச்சர் என்ற முறையில் அவருக்கு இருந்தது.
அரசாங்க முதலீட்டு நிறுவனம் என்ற முறையில் 1எம்டிபியின் ஒரே பங்குதாரராக நிதியமைச்சு இருந்து வந்தது.