Home Featured நாடு சிலுவையை மறைக்க வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்!

சிலுவையை மறைக்க வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்!

723
0
SHARE
Ad

 

4_gerijah_1லங்காவி – கூரையின் மேல் சிலுவை போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் காற்றுக் குழாய்களை வைத்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அந்த வீடமைப்பு நிறுவனம், உடனடியாக சிலுவைத் தோற்றத்தை மறைக்க அதன் மேல் வண்ணம் பூசும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

‘த ஸ்டார்’ இணையதளத்தின் தகவலின் படி, நேற்று அந்த குடியிருப்புப் பகுதியில் கடல் பார்த்து இருக்கும் வீடுகள் அனைத்திலும், வண்ணம் பூசப்பட்டு சிலுவைத் தோற்றம் மறைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், கடல் பார்க்காத முகப்பு கொண்ட வீடுகளுக்கு இன்னும் வண்ணம் பூசவில்லை என்று ஸ்டார் தெரிவித்துள்ளது.

கெடா, பெர்லிஸ் ரியல் எஸ்டேட் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் (Real Estate and Housing Developers’ Association) தலைவர் டத்தோ ரிக் செங் வூய் சியாங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் வீடமைப்பு நிறுவனத்தின் மேற்பார்வையில் உள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (The Star)