Home Featured நாடு தாமான் மெலாவத்தியில் கட்டிடம் இடிந்து 5 பேர் படுகாயம்!

தாமான் மெலாவத்தியில் கட்டிடம் இடிந்து 5 பேர் படுகாயம்!

508
0
SHARE
Ad

KL17_30121_c1652286_151231_778கோலாலம்பூர் – தாமான் மெலாவத்தி அருகே நேற்று இரவு புதிதாகக் கட்டுமானப் பணிகளில் இருந்த வணிக வளாகத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றது.

இந்தோனேசியா, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

படுகாயமடைந்த பங்களாதேஷ் தொழிலாளர் ஒருவருடன், மேலும் 5 பேர் அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 9 பேர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.

தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.