Home Featured நாடு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகை! நஜிப் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகை! நஜிப் அறிவிப்பு!

450
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களின் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்புத் தொகையாக 500 ரிங்கிட் வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

2016 வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி, 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட்டும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, தலா 250 ரிங்கிட்டும் நாளை வழங்கப்படும் என்றும் நஜிப் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நஜிப் இந்தத் தகவலை வெளியிட்டார். தொடர்ந்து அரசாங்க பொதுச் சேவை இலாகா வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் 2015இல் பணியாற்றிய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு உதவித் தொகையை வழங்குவதற்காக அரசாங்கம் 645 மில்லியன் ரிங்கிட் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.