Home Featured இந்தியா பதன்கோட் தாக்குதல்: நட்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!

பதன்கோட் தாக்குதல்: நட்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!

555
0
SHARE
Ad

modi n nawazபதன்கோட் – பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும், மேலும் இது தொடர்பான பல்வேறு ஆதாரங்களையும் இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளது. இரு நாட்டுப் பிரதமர்களின் முயற்சியால் புதியதாக நட்பு மலர்ந்துள்ள நிலையில், அதனைக் குலைக்கும் விதமாகவே பதன்கோட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற முடியும்.

இந்நிலையில் இதுகுறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க உகந்த தகவல்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீதும் மற்றும் அமைப்பினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம், மோடி வலியுறுத்தி உள்ளார்.”

“அதற்கு, உறுதியான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தொடர்ந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.