Home Featured கலையுலகம் நான் கௌரவிக்கப்பட்டேன் – பத்ம விபூஷண் விருது குறித்து ரஜினி பெருமிதம்!

நான் கௌரவிக்கப்பட்டேன் – பத்ம விபூஷண் விருது குறித்து ரஜினி பெருமிதம்!

660
0
SHARE
Ad

rajiniசென்னை – நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவித்துள்ள நிலையில், இந்த விருது தன்னை மிகவும் கௌரவிப்பதாக நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விருது குறித்து ரஜினி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்னை மிகவும் கௌரவப்படுத்தி உள்ளதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் கூறிய என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.