Home Featured நாடு 1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!

1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!

575
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சட்டத்துறைத் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி அதிருப்தி அடையச் செய்துள்ளது.

அவர்கள் அவ்வாறு பொதுவில் அறிவிக்காமல் முறையான வழிகளின் மூலம் அறிவித்திருக்க வேண்டும் என சாஹிட் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பொது அறிக்கை மூலம் தெரியப்படுத்துவது, என்னைப் பொறுத்தவரையில், அது சரியான முறையல்ல”

#TamilSchoolmychoice

“இதனால் இரு நாட்டு உறவுகளில் சிக்கல் ஏற்படுவதோடு, ஊடகங்களுக்கு அது சாதகமாக அமைந்துவிடும்” என்று நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற சுற்றுலா கண்காட்சி 2016-ல் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் சாஹிட் தெரிவித்துள்ளார்.