அங்காராவில் இராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டின் ஆகாயப் படை தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. துருக்கி நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடமும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில்தான் உள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல் துறையினர் துரிதமாக பணியில் இறங்கும் காட்சி
சம்பவம் நடந்த அந்த இடத்தைச் சுற்றி கரும் புகையும் நெருப்புப் பிழம்புகளும் சூழ்ந்தன என்றும் பேருந்து ஒன்றும் தீப்பற்றிக் கொண்டது என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்திற்கான காரணங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக துருக்கி நாட்டின் பிரதமர் அகமட் டாவுதோக்ளு (Ahmet Davutoglu) அலுவலகம் தெரிவித்துள்ளது.