தமது தனிப்பட்ட வலைத்தளத்தில் மகாதீர் அவதூறான ஒரு பதிவை வெளியிட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
“துணை அரசு வழக்கறிஞரிடம் விசாரணை அறிக்கையை ஒப்படைக்கும் முன்னர் அதை நன்கு அலசி ஆராய்வோம்” என்று செய்தியாளர்களிடம் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார்.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ‘சே டட்’ (CHE DET) வலைப்பக்கத்தில் மகாதீர் பதிவிட்ட சில கருத்துக்கள் அவருக்கெதிராக திரும்பியுள்ளன. இதையடுத்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.