தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி “பழம் கனிந்து வருகிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று கூறியிருக்கின்றார்.
தொடர்ந்து தே.மு.தி.க . கூட்டணி ஏற்படும் என இன்னும் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இருக்கிறது” என்றும் பதிலளித்துள்ளார் கருணாநிதி.
ஆனால் ஏன் இன்னும் இழுபறி நீடிக்கிறது, தேமுதிக என்ன கோரிக்கை வைக்கின்றனர் என்ற பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு மட்டும் “ஒன்றும் சொல்வதற்கில்லை” என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
விஜயகாந்த் கனிந்து வருவாரா, கனிந்து கலைஞரின் கிண்ணத்தில் உள்ள பாலில் விழுவாரா அல்லது பாஜக விரிக்கும் வலையில் விழுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ்நாடும் காத்திருக்கின்றது.