Home Featured நாடு போலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை!

போலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை!

710
0
SHARE
Ad

fakecoversகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அட்டைப்படத்துடன் கூடிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, அது குறித்து விமர்சனமும் செய்த பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் னாஅர்.சிவராசா நேற்று காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று மாலை மலேசியாகினிக்கு அளித்துள்ள தகவலில், “காலை 11.30 மணியளவில் எனது வாக்குமூலத்தை பதிவு செய்யத் தொடங்கினர். இப்போது தான் வெளியே அனுப்பப்பட்டேன் (டாங்கி வாங்கி காவல்துறைத் தலைமையகத்திலிருந்து). ஒருநாள் முழுவதும் என்னை இருக்க வைத்துவிட்டார்கள். மாலை 5.15 மணியளவில் தான் வெளியே வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் கீழ் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

 

 

Comments