Home Featured உலகம் எகிப்து விமானம் கடத்தல்: கடத்தல்காரன் அரசியல் தஞ்சம் கேட்பதாகத் தகவல்!

எகிப்து விமானம் கடத்தல்: கடத்தல்காரன் அரசியல் தஞ்சம் கேட்பதாகத் தகவல்!

558
0
SHARE
Ad

CestkMlXIAEul2vகெய்ரோ – இன்று நண்பகல் எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்த்ஏர் விமானம், மர்ம நபரால் கடத்தப்பட்டு தற்போது சைப்ரஸ் விமான நிலையத்தில்நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, விமானத்தில் 4 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, 5 பயணிகள் விமானத்தில் இருப்பதாக ‘ஏர்லைவ்’ உட்பட சில முன்னணி தகவல் தளங்கள் தெரிவித்தன.

இதனிடையே, கடத்தல்காரனின் பெயர் இப்ராகிம் சமாகா என்றும், அவன் தனக்கு அரசியல் தஞ்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

சைப்ரசில் வாழும் பெண் ஒருவருக்கு அராப் மொழியில் எழுதப்பட்ட 4 பக்கக் கடிதங்களை கடத்தல்காரன் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.