Home Featured இந்தியா ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!

ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!

579
0
SHARE
Ad

arun_jaitley_pti_580மெல்பர்ன்  – ஆஸ்திரேலியாவில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்நிய முதலீட்டை ஈர்க்கவும், இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியை பெருக்கவும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன்கீழ் இந்தியாவில் தொழில் தொடங்குங்கள் என மத்திய அரசு வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சிட்னியில் ‘மேக் இன் இந்தியா’ மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார்.