Home உலகம் இரஷிய விமானத் தளங்கள் மீது உக்ரேன் டுரோன்கள் தாக்குதலால் 7 பில்லியன் டாலர் சேதங்கள்!

இரஷிய விமானத் தளங்கள் மீது உக்ரேன் டுரோன்கள் தாக்குதலால் 7 பில்லியன் டாலர் சேதங்கள்!

90
0
SHARE
Ad

கீவ்: பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி பொதுமக்களிடையே மரணங்களை ஏற்படுத்திய இரஷியாவுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என பதிலடி கொடுக்கும் வண்ணம் உக்ரேன் டுரோன்கள் என்னும் ஆளில்லா சிறுரக வானூர்திகளைக் கொண்டு மூர்க்கமானத் தாக்குதல்களை உக்ரேன் மேற்கொண்டது.

எல்லைக் கோட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் பின்னால் உள்ள இரஷிய விமானத் தளங்கள் மீது உக்ரேன் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலால் சில விமானங்கள் சேதப்படுத்தப்பட்டன. மொத்த சேதங்கள் 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதல் என மதிப்பிடப்படுகிறது.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. இந்த நடவடிக்கையில், டுரோன்களை இரஷிய வட்டாரத்திற்குள்   கடத்தி, லாரிகளின் மேல் மர அமைப்பு கொண்ட நடமாடும் வீடுகளில் மறைத்து வைப்பதும் அடங்கும் என்று உக்ரைனின் உளவுத்துறை அமைப்பின் ஆதாரம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இரஷியாவின் முக்கிய விமானத் தளங்களிலும் இரஷ்யாவின் ஏவுகணை கப்பல் கொண்டு செல்லும் விமானங்களில் 34% தாக்கப்பட்டன என்று ஆதாரம் கூறியது. மாஸ்கோ தனது சொந்த தாக்குதல்களையும் தாக்குதல் நடவடிக்கைகளையும் அதிகரித்துக் கொண்டிருக்கும் போதிலும், உக்ரேன் இன்னும் ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதையும் இந்த தாக்குதல் காட்டியது.

கடந்த 3 ஆண்டுகளில் உக்ரேன் மேற்கொண்ட மிகப் பெரியத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. கண்காணிப்பு விமானங்களில் ஒன்று உட்பட 40க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த நடவடிக்கையில் தாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.