Home Featured நாடு மே தினப் பேரணியில் மகாதீர் – தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் வீதியில் இறங்குகிறார்!

மே தினப் பேரணியில் மகாதீர் – தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் வீதியில் இறங்குகிறார்!

472
0
SHARE
Ad

Dr Mahathirகோலாலம்பூர் – வரும் மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினத்தன்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியும், மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் மே தினப் பேரணியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதீர் மே தினப் பேரணியில் கலந்து கொள்ளும் தகவலை மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் (எம்டியுசி) இடைக்காலத் தலைவர் அப்துல்லா சானி அப்துல் ஹமீத் இன்று அறிவித்தார்.

மலேசியாவில் பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும், உள்நாட்டினராக இருந்தாலும், நியாயமான முறையில் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே அப்போராட்டத்தின் கோரிக்கை என்று அப்துல் ஹமீத் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அப்பேரணியில் சுமார் 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.