Home Featured தமிழ் நாடு வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

635
0
SHARE
Ad

vaikoசென்னை – மக்கள்நலக் கூட்டணியில் உள்ள மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததுடன், அவர் போட்யிடுவதாக இருந்த கோவில்பட்டி தொகுதியில், மதிமுக சார்பில் மாற்று வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார். வைகோவின், இந்த முடிவால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள்நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.