Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா: 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்! முதல் கோப்பு காலைச் சிற்றுண்டி இலவசம்!

ஜெயலலிதா: 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்! முதல் கோப்பு காலைச் சிற்றுண்டி இலவசம்!

646
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று முதலமைச்சராகப் பதவியேற்றதும் உடனடியாக தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா தனது பணிகளைத் தொடங்கினார். முதல் கட்டமாக இன்று 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அங்கீகாரமாகும்.

அடுத்து அவர் கையெழுத்திட்ட 4 கோப்புகளில், தாலிக்கு 8 கிராம் வழங்கும் திட்டம், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் உத்தரவு, 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அதனை இலவசமாக வழங்கும் திட்டம், மற்றும் டாஸ்மாக் எனப்படும் மதுபான விற்பனைக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.

#TamilSchoolmychoice

காலை 10.00 மணிக்குத் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இனி நண்பகல் 12.00 மணிக்குத்தான் திறக்கும்.