“சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெனான்டியில் இது போன்ற சம்பவம் நடந்தது. இன்று இதற்கு முந்தைய சம்பவத்தை விடக் கூடுதலாக சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன” என்று ராமசாமி மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
ஆலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளை நோக்கி மிகப் பெரிய கற்களை வீசி அவற்றை துண்டு துண்டாக்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சேதப்படுத்தப்பட்ட இரண்டு ஆலயங்களையும் நிர்வகிக்கும் குழு ஒன்று என்பதால் ஒரே வாரத்தில் இரண்டு ஆலயங்கள் சூரையாடப்பட்டுள்ளன. இதனை வைத்துப் பார்க்கும் போது குற்றவாளிகள் ஏதோ வலுவான தகவலைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இது ஒரு தீவிரவாதத்தின் செயலா அல்லது பழிவாங்கலா?” என்று இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம், ஆரக்குடாவிலுள்ள பெனான்டி எஸ்டேட்டில் இருந்த முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்த சிலைகள் பல மர்ம நபர்களால் உடைத்து சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.