Home Featured நாடு பினாங்கு மருத்துவமனையில் மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார் அகமட் பாஷா!

பினாங்கு மருத்துவமனையில் மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார் அகமட் பாஷா!

719
0
SHARE
Ad

Ahmad-Bashahஜார்ஜ் டவுன் – பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா, இன்று புதன்கிழமை, கெடா மாநில செயற்குழுக் கூட்டத்தை மருத்துவமனையிலுள்ள அறை ஒன்றில் நடத்தியுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில், பினாங்கு மருத்துவமனையில் உள்ள சந்திப்பு அறை ஒன்றில் 9 செயற்குழு உறுப்பினர்களோடு அக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4-ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகமட் பாஷாவிற்கு, குடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice