சென்னை – தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதவி விலகலை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அவரது சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றதைத் தொடர்ந்து இளங்கோவன் தலைமைத்துவ பாணியினால்தான் இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இளங்கோவன்.
அவருக்குப் பதிலாக அடுத்த தமிழகக் காங்கிரஸ் தலைவர் யார் என்ற ஆரூடங்களும் தற்போது எழுந்துள்ளன.