“ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இசுலாமிய வாழ்வியல் நெறி ஆகும். எனவே, இந்த நோன்பு பெருநாளில் இல்லாருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்தி அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு சமமாக நின்று இப்பெருநாளை வரவேற்க வேண்டும்” என்றும் அவர் தனது செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தொடர்ந்து, இப்பெருநாளில் உணவு பழக்க முறையில் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்து உடல் நலன் மீதும் கவனம் செலுத்தி, அதிகமான இனிப்பு வகைகளை உட்கொள்ளாமல் சுகாதாரத்துடனும் நோன்பு பெருநாளைக் கொண்டாட வேண்டும். இந்நோன்பு பெருநாள் கொண்டாட்ட காலங்களில் உணவை அதிகளவு விரயம் செய்யாமல் உணவு முறையில் மிதமான போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும்” எனவும் சுகாதார அமைச்சருமான சுப்ரா கூறியுள்ளார்.
“மேலும், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் கவனமுடன் வாகனத்தைச் செலுத்துவதோடு, சாலை நெரிசலைத் தடுக்குப் பொருட்டும், சக பயணிகளுக்கும், அவசர பாதையைப் பயன்படுத்துவோருக்கும் இடையூறு தராத வண்ணம் திட்டமிட்டுப் பயணித்தலும் மிக அவசியமாகும். எனவே, புனித நோன்பு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இதன்வழி எனது மனாமர்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடங்கவிருக்கும் ஷாவால் மாதம் இசுலாமிய அன்பர்களுக்கும் வளம் பெருக்கும் மாதமாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் சுப்ரா தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.