Home Featured நாடு பேராக்கில் கேமராவில் சிக்கிய ‘உள்ளாடை’ திருடன்!

பேராக்கில் கேமராவில் சிக்கிய ‘உள்ளாடை’ திருடன்!

974
0
SHARE
Ad

Perakசுங்கை சிப்புட் – பேராக் அருகே உள்ள கிராமங்களில், கடந்த சில மாதங்களாக வெயிலில் உலர்த்தியிருக்கும் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போவதாக அக்கிராமங்களைச் சேர்ந்த பலர் புகார் அளித்து வந்த நிலையில், அதனைத் திருடும் நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சுங்கை சிபுட்டில் வீட்டின் முன் காயவைக்கப்பட்டிருக்கும் மூன்று உள்ளாடைகளை அந்நபர் திருடிச் செல்வது அங்கு வைக்கப்பட்டிருந்த இரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்தக் காணொளியை வீட்டின் உரிமையாளர் நட்பு ஊடகங்களில் கசிய விட அது தற்போது பலராலும் பரபரபாகப் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

இத்தகவலை (Nanyang Siang Pau) என்ற நாளிதழும் பகிர்ந்துள்ளது.