இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஒரு தேசியத் திரைப்பட வாரியம் மொழி அடிப்படையில் விருது வழங்குவதன் நோக்கம் தான் என்ன? மலேசிய ரசிகர்களால் பாராட்டப்பட்ட “ஓலா போலா” மற்றும் ‘ஜகாட்’ போன்ற திரைப்படங்கள் தேசிய மொழி தேர்வில் முன்மொழியப்படாதது வருத்தத்தை அளிக்கிறது.”
“ஆகவே இவ்வாண்டு திரைப்பட விழாவில் மொழி அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என மஇகா வலியுறுத்துகிறது.ஏனென்றால் இவை திரைப்படத் துறையில் ஈடுபடுவோருக்கு சுணக்கத்தையே ஏற்படுத்தும் . கலைத்துறை ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு மற்ற துறைகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்பது எவரும் மறுக்க இயலாது.” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.