35 வெளிநாட்டவரைக் கொண்டிருந்த அப்படகில், 4 பணியாளர்கள் இருந்துள்ளனர். கிழக்கு பாலியின் பாடாங் பாய் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட அப்படகு சற்று நேரத்தில் வெடித்துள்ளது.
இது குறித்து பாலி காவல்துறைப் பேச்சாளர் மேட் சுடானா கூறுகையில், லோம்பாக் கடற்பகுதிக்கு அருகே இந்த வெடிவிபத்து நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வெடிவிபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. பாலி காவல்துறை வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றது.
Comments