Home Featured நாடு எதிர்கட்சி வெற்றி பெற்றால் மொகிதின் தான் பிரதமர் – மகாதீர் கூறுகிறார்!

எதிர்கட்சி வெற்றி பெற்றால் மொகிதின் தான் பிரதமர் – மகாதீர் கூறுகிறார்!

893
0
SHARE
Ad

mahathir-muhyiddin-comboகோலாலம்பூர் – வரும் 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சி வெற்றி பெற்றால், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் பிரதமர் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றிய போது, “எதிர்கட்சி வெற்றியடைந்தால், மொகிதின் தான் பிரதமராவார் என்பதைத் தவிர மற்றது எதையும் தற்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால் அது கட்சியைப் பொறுத்து அமையும். அவரை (மொகிதினை) தலைவராக முன்மொழிகிறார்களா? யார் பிரதமராவது என்பது கூட்டணியைப் பொறுத்து தான் அமையும்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice