Home Featured கலையுலகம் அண்ணாமலை இல்லாத எனது எதிர்காலம் – விஜய் ஆண்டனி உருக்கம்!

அண்ணாமலை இல்லாத எனது எதிர்காலம் – விஜய் ஆண்டனி உருக்கம்!

679
0
SHARE
Ad

vj

சென்னை – இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை (வயது 49) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, மாரப்படைப்பால் மரணமடைந்தார்.

விஜய் ஆண்டனி இசையில், அவர் எழுதிய, ‘சின்னத் தாமரை’, ‘என் உச்சி மண்டைல’ போன்ற பாடல்கள் இன்று வரையில் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அண்ணாமலையின் திடீர் மறைவு குறித்த அறிந்த விஜய் ஆண்டனி, “என்னுடைய நண்பர் பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார். அவர் இல்லாமல் எனது எதிர்காலத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என்று விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.