Home Featured உலகம் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!

785
0
SHARE
Ad

Nawaz-Sharifஇஸ்லாமாபாத் – நேற்று புதன்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, இந்தியா  நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், “நாங்கள் அண்டை நாட்டுடன் அமைதியான முறையில் இருக்க நினைப்பதை பலகீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எமது நாட்டின் எல்லை கண்ணியத்தைத் தற்காக்க எமது படைகள் முழுத் தகுதியோடு உள்ளன” என்று நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice