மரியாவிற்கு ஆதரவாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்திற்கு எதிராகவும், மரியாவின் மகன்கள் அசுமின், அசிமான், அசெமி உட்பட சுமார் 400 பெர்சே ஆதரவாளர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மரியா மீதான கைது நடவடிக்கை குறித்தும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குறித்தும் விமர்சித்த மகாதீர், பின்னர் இரவு 10 மணியளவில் தனது மனைவியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.