Home Featured இந்தியா பதஞ்சலிக்கு 11 லட்சம் அபராதம் – நீதிமன்றம் உத்தரவு!

பதஞ்சலிக்கு 11 லட்சம் அபராதம் – நீதிமன்றம் உத்தரவு!

616
0
SHARE
Ad

baba-ramdevபுதுடெல்லி – மற்ற நிறுவனங்களின் பொருட்கள் மீது தங்களது முத்திரையைப் பதித்து விற்பனை செய்து வருவதாக கடந்த 2012-ம் ஆண்டு  பாபா ராம்தேவின்  பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த ஹரித்வார் நீதிமன்றம், 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தொகையை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் பதஞ்சலி தயாரிப்புப் பொருட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இதனால் அந்நிறுவனத்தின் வருமானமும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

தற்போது ஆண்டு வருமானமாக 5000 கோடி ரூபாய் ஈட்டி வரும் அந்நிறுவனம், அடுத்த நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் ஈட்டும் என்று கூறப்படுகின்றது.