Home Featured தமிழ் நாடு சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு!

சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு!

890
0
SHARE
Ad

 

sasikala-pushpaசென்னை – அதிமுக-வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வழக்குத் தொடுத்துள்ளார்.

அதிமுக சட்டவிதிமுறைகளின் படி, அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதிமுக நிர்வாகிகள் சசிகலாவைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்ய கலந்தாலோசித்து வரும் நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பதால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.