Home Featured நாடு இபிஎஃப் பணம் குறித்து வாட்சாப்பில் பொய்யான தகவல்!

இபிஎஃப் பணம் குறித்து வாட்சாப்பில் பொய்யான தகவல்!

678
0
SHARE
Ad

EPF-கோலாலம்பூர் – வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இபிஎஃப் (ஊழியர் நலவைப்பு நிதி) பணத்தை திரும்பப் பெறும் மூத்த குடிமகன்களுக்கு அரசாங்கம் 2500 ரிங்கிட் ஊக்கத் தொகை தருவதாக வாட்சாப்பில் பரவி வரும் தகவலை இபிஎஃப் நிர்வாகப் பிரிவு மறுத்துள்ளது.

தற்போது வாட்சாப்பில் அப்படி ஒரு ஒலித்துணுக்கு பரவி வருவதாகவும், அத்தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் இபிஎப் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.