Home Featured தமிழ் நாடு தடைகளை மீறி ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன! காளைகள் பறிமுதல்!

தடைகளை மீறி ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன! காளைகள் பறிமுதல்!

554
0
SHARE
Ad

jallikkattuமதுரை – உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று மதுரைக்கு அருகிலுள்ள பாலமேடு என்ற இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்ததோடு, காளைகளையும் பறிமுதல் செய்து காவலில் வைத்துள்ளனர்.

ஏறத்தாழ 20 காளைகள் வரை காவல்துறையினரில் காவலில் தற்போது இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.