தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணான பதிவுகளை சுசித்ரா வெளியிட்டுவந்தார். குறிப்பாக அதில் எல்லாவற்றிலும் நடிகர் தனுஷை அதீதமாகப் புகழ்வதுமாகவும், மறைமுகமாக இகழ்வதுமாகவும் அப்பதிவுகள் இருந்தன. அதுமட்டுமின்றி சிம்பு தான் உண்மையான வெற்றியாளர் என்றும் சுசித்ரா குறிப்பிட்டிருந்தார்.
இதையெல்லாம் படித்த அவரது ரசிகர்களுக்கு, அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்களோ என்ற எண்ணமே நிலவியது.
ஆனால், சுசித்ராவின் அடுத்தடுத்த பதிவுகள் அப்படி யாரும் ஹேக் செய்யவில்லை என்று கூறியது.
காயம்பட்ட தனது கையைப் படம் பிடித்துப் போட்ட சுசி. “இதை வெளியே சொல்ல விரும்பவில்லை தனுஷ், நான் எப்போதுமே நியாயமான விளையாட்டை தான் விளையாடுவேன். ஆனால் சத்குரு குழப்பாமல் இருக்கமாட்டார். எனவே போர். அப்படி தான்” என்றும் சுசித்ரா குறிப்பிட்டிருந்தார்.
என்ன தான் பிரச்சினை? என்று அறிந்து கொள்ள, செய்தியாளர்கள், சுசித்ராவின் கணவர் நடிகர் கார்த்திக்கை அழைக்க, அவரோ அது சுசித்ராவின் தனிப்பட்ட பிரச்சினை நான் இதை எப்படி பேச முடியும்?” என்று ஒதுங்கிக் கொண்டதாக ஊடகங்கள் சில தெரிவித்திருக்கின்றன.
எனவே இந்த இந்த விவகாரம் இன்னும் குழப்பாகவே தான் உள்ளது. இது குறித்து விளக்கம் கேட்க சில முன்னணி ஊடகங்கள் சுசித்ராவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும், அவர் பதிலளிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.