Home Featured நாடு “மலேசியர்களை விடுவியுங்கள்” – வடகொரியாவிற்கு நஜிப் கண்டனம்!

“மலேசியர்களை விடுவியுங்கள்” – வடகொரியாவிற்கு நஜிப் கண்டனம்!

584
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – இரு நாட்டுத் தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தவதைத் தடுக்க உடனடியாகத் தடுத்து வைத்திருக்கும் மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  1. நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் வடகொரியாவின் முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  2. அனைத்துலக சட்டம் மற்றும் தூதரக நடைமுறைகளை முற்றிலும் மீறி, எங்களது நாட்டவர்களை பிணை பிடித்து வைத்திருப்பது மிகவும் கொடூரமான செயல்.
  3. அமைதி விரும்பும் நாடு என்ற முறையில், மலேசியா அண்டை நாடுகளுடன் எப்போதும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. எனினும், குடிமகன்களைக் காப்பதே எங்களது முதல் கடமை, அதற்கு அச்சுறுத்தல் வந்தால், தக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம்.
  4. தேசிய பாதுகாப்புக் கவுன்சிலை அவசரக் கூட்டத்திற்கு அழைத்திருக்கிறேன். வடகொரியாவில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வரை, மலேசியாவில் உள்ள அனைத்து வடகொரிய நாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கும் படி தேசிய காவல்படைத் தலைவரிடமும் உத்தரவிட்டிருக்கிறேன்.
  5. உடனடியாகத் தீர்வு கிடைக்குமென்று நம்புகிறோம். எனவே பிரச்சினைகள் இன்னும் தீவிரமாகாமல் தடுக்க, எங்களது குடிமகன்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கும் படி வடகொரிய தலைமைத்துவத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நஜிப் தெரிவித்திருக்கிறார்.