Home Featured தமிழ் நாடு தேச துரோக வழக்கு: வைகோவுக்கு 15 நாள் காவல்!

தேச துரோக வழக்கு: வைகோவுக்கு 15 நாள் காவல்!

659
0
SHARE
Ad

vaikoசென்னை – விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கில், அவரை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான வைகோ, பிணையில் செல்ல விரும்பவில்லை என்று கூறியதால், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வைகோ புழல் சிறையில் அடைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice