வாஷிங்டன் – தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்பின் ஆலோசனையின் பேரில் தான், தனது தந்தையான அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டதாக எரிக் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, சிரியா மீது அமெரிக்கா 59 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 6 பேர் மரணமடைந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சிரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
#TamilSchoolmychoice
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பின் மகனான எரிக் டிரம்ப், அதிபரின் ஆலோசகராகச் செயல்பட்டு வரும் தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்ப், சிரியா மீது தாக்குதல் நடத்த தனது தந்தையைத் தூண்டியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.