Home உலகம் பூமியை தாக்கவரும் எரிகல் – கடவுளைப் பிரார்த்திக்க சொல்லும் நாசா!

பூமியை தாக்கவரும் எரிகல் – கடவுளைப் பிரார்த்திக்க சொல்லும் நாசா!

539
0
SHARE
Ad

img1130322040_1_1நியூயார்க், மார்ச் 22- பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரிகல் பூமியை தாக்கக் கூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் என நாசா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் அளவுள்ள எரிகற்களும் அடங்கும்.

10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் அளவுள்ள  வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நாசாவின் தலைமை அதிகாரி சார்லஸ் போல்டேன் கூறுகையில், இந்த எரிகல்லின் தாக்கத்தை குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசை திருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர்  அளவுள்ள  எரிகல் ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. அதன் பிறகு மிகப்பெரிய எரிகல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன. பூமியை தாக்கும் எரிகற்களை திசை திருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.