தொடர்ந்து இன்று மே 22ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறும் 70-வது உலகச் சுகாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரத்திற்கு டாக்டர் சுப்ரா அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார்.
29-வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் காமன்வெல்த் சுகாதார அமைச்சர்கள் ஒவ்வொருவராகத் தங்களின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கூட்டத்தில் டாக்டர் சுப்ரா “உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கான நிலையான நிதி” தலைப்பில் நடத்தப்பட்ட முதல் வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினார்.
70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ள சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிட்சர்லாந்துக்கான மலேசியத் தூதர் தனது இல்லத்தில் விருந்தபசரிப்பு நடத்தி கௌரவித்தார்.
ஐக்கிய நாடுகளுக்கான மலேசியாவின் நிரந்தரத் தூதர் டத்தோ ஏ.முகமட் சின் தனது இல்லத்தில் வழங்கிய விருந்துபசரிப்பில் டாக்டர் சுப்ரா மற்றும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணி…
படங்கள் – நன்றி : drsubra.com