Home நாடு சமயப்பள்ளி தீ விபத்து: பிரதமர் நஜிப் இரங்கல்!

சமயப்பள்ளி தீ விபத்து: பிரதமர் நஜிப் இரங்கல்!

977
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் சமயப்பள்ளியான டாருல் குரான் இட்டிஃபாக்கியாவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் 20-கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர்.

22 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் என மொத்தம் 24 பேர் பலியாகியிருப்பதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

இதனிடையே, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இச்சோகத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இன்னாலில்லா.. டாருல் குரான் இட்டிஃபாக்கியா சமயப்பள்ளி தீயில் சிதைந்து போனதையும், அதில் 20 மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதையும் படிக்கும் போது மிகவும் சோகமடைகின்றேன்” என்று நஜிப் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகாரப்பூர்வப் பயணமாக நஜிப் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments