இது குறித்து பிரிக்பீட்ல்ஸ் ஓசிபிடி துணை ஆணையர் ருஸ்லான் காலிட் கூறுகையில், வங்கியில் இருந்த இரகசியக் கேமராவை ஆய்வு செய்திருப்பதோடு, வங்கி ஊழியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றோம் என்று தெரிவித்திருக்கிறார்.
“கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, மதியம் 12.30 மணியளவில், சம்பந்தப்பட்ட வங்கியில் தீயணைப்புக் கருவிகளை சரி செய்வதாகக் கூறி அந்நபர் வங்கி நிர்வாகியிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.”
“அப்போது அந்நபரின் அடையாள அட்டையைக் காட்டச் சொன்ன வங்கி மேலாளர், அதை அவர் காட்ட மறுக்கவே, அவருக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”
“என்றாலும், மேலாளர் மதிய உணவிற்காகச் சென்றவுடன், வங்கி ஊழியர்களிடம் சமயோஜிதமாகப் பேசிய அந்நபர், வங்கியில் இருந்த 600,000 ரிங்கிட்டை திருடிச் சென்றிருக்கிறார்” என்று ருஸ்லான் கூறியிருக்கிறார்.