ஜெனிவாவில் அவருக்கு எதிராக இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சில சிங்களக் குழுக்கள் வாக்குவாதம் நடத்தியதாகவும், அவரைத் தாக்க முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு ஜெனிவாவில் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அவரைச் சுற்றி எப்போதும் இரண்டு பாதுகாவலர்கள் பின் தொடர்கின்றனர் (மேலே படம்).
மு.க.ஸ்டாலின் கண்டனம்
“மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது. இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்” என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.