Home நாடு நிதி ஒதுக்கீட்டில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி – நஜிப் தகவல்!

நிதி ஒதுக்கீட்டில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி – நஜிப் தகவல்!

674
0
SHARE
Ad

Malaysia's Prime Minister Najib Razak waves as he arrives at Naypyitaw international airport to attend 24th ASEAN Summitபுத்ராஜெயா – 2018-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில், அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருப்பதாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தகவல் தெரிவித்திருக்கிறார்.

வரும் அக்டோபர் 27-ம் தேதி, நிதியறிக்கை சமர்ப்பிக்கும் போது, பொதுத்துறையில் உள்ள வளர்ச்சி குறித்து அறிவிக்கப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

“எனக்குத் தெரியும் நம்மில் நிறைய பேர் சில அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கிறோம். கடவுள் விருப்பத்தின் பேரில், நிதி ஒதுக்கீட்டில் சில நல்ல செய்திகளை அறிவிக்கப் போகிறேன். எனவே அமைதி காப்போம்” என்று 15-வது அரசு ஊழியர்கள் கூட்டத்தில் நஜிப் பேசியிருக்கிறார்.