Home கலை உலகம் தீபிகாவை உயிரோடு எரித்தால் 1 கோடி – ஷத்ரிய மகாசபா அறிவிப்பு!

தீபிகாவை உயிரோடு எரித்தால் 1 கோடி – ஷத்ரிய மகாசபா அறிவிப்பு!

1282
0
SHARE
Ad

Deepikaபுதுடெல்லி – சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், ‘பத்மாவதி’ திரைப்படத்திற்கு வடஇந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் சித்தூரை ஆண்ட ராஜ புத்ர வம்ச ராணி பத்மினி வேடத்தில் தீபிகா நடித்திருக்கிறார்.

இந்நிலையில், பத்மினியின் கதாப்பாத்திரத்தை தவறாக இப்படம் சித்தரித்து விட்டதாக இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.

#TamilSchoolmychoice

வரும் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், தீபிகா படுகோனை உயிரோடு எரித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஷத்ரிய மகாசபா திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இது சினிமா உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தீபிகா படுகோனே வீட்டில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.