புதுடெல்லி – பல ஆண்டுகளாகக் காதலில் இருந்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நேற்று திங்கட்கிழமை இத்தாலியில் திருமணம் செய்தனர்.
பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அவர்கள் இருவரும் இத்தாலியின் மிலன் நகரில் திருமணம் செய்தனர்.
பஞ்சாபி முறைப்படி இத்திருமணம் நடைபெற்றதாகவும், வரும் டிசம்பர் 26-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
#TamilSchoolmychoice
இரு பிரபலங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என்பதால், மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெறவிருக்கிறது.
இதில் இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.