ஓகி புயலின் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை – காணவில்லை – என்றும் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சோகமும் பதட்டமும் நிலவி வருகின்றது.
பல்வேறு முனைகளில் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவதோடு, பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து அங்கு வருகை தந்து நிலவரங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கன்னியாகுமரி மாவட்ட நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.