Home உலகம் வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ராஜபக்சே

வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ராஜபக்சே

494
0
SHARE
Ad

rajapasheஇலங்கை, மார்ச் 26- வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என  இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அவர்கள் பிறந்த இந்த மண்ணின் உரிமை இருக்கின்றது.

உங்களுக் வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை எழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம்.

#TamilSchoolmychoice

உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க நாங்கள் திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள்.

இழந்த நிலங்களை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். போரின் போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்த்த ஏனையவற்றை உங்களுக்கு  வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.