Home கலை உலகம் பத்மாவதி படத்திற்குத் தடை விதிக்க இரு மாநில அரசுகள் மனு!

பத்மாவதி படத்திற்குத் தடை விதிக்க இரு மாநில அரசுகள் மனு!

717
0
SHARE
Ad

padmavati-movie-stillபுதுடெல்லி – புகழ் பெற்ற இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பத்மாவதி’ பல்வேறு சர்ச்சைகள் – தாமதங்களுக்குப் பின்னர் இந்தியாவில் வெளியிடப்பட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வரும் ஜனவரி 26-ம் தேதி, வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் உலகமெங்கும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கும் நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் இத்திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

மேலும், உச்சநீதிமன்றத்தில் முந்தைய உத்தரவை மாற்றக் கோரியும் அம்மனுவில் கூறப்பட்டிருக்கிறது.