இது குறித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “பக்காத்தான் ஹராப்பானின் தலைவரான மகாதீர், எதிர்கட்சிக் கூட்டணியின் உருமாற்றத் திட்டத்தை ஏற்று அதில் உறுதியாக இருக்கிறார். அவர் தனது பழைய வழிக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்ச வேண்டாம்” என்று தெரிவித்தார்.
மேலும், மாற்றத்திற்கு மகாதீர் தயாராகி வருவதாகவும், இந்த அரசாங்கத்தால் அவர் அதிகமான அவஸ்தைகளை அடைந்துவிட்டார் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
Comments