எனினும் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மஇகாதான் போட்டியிடும் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என டாக்டர் சுப்ரா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் புத்ரா ஜெயாவில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் சுப்ரா “ஒருமுறை டான்ஸ்ரீ கேவியசுடன் சுமுகமான சந்திப்பு ஒன்றை நடத்தினேன். நாங்கள் இருவரும் காப்பி அருந்தினோம். ஆனால், கேமரன் மலையில் மஇகாதான் போட்டியிடும். அந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். பிரதமரும் அந்த முடிவை ஆதரிப்பார்” எனக் கூறியிருக்கிறார்.