பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.
டிரெபெசே (Trebes) என்ற நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இருவர் மரணமடைந்தனர் என்றும் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் டிரெபெசே என்ற இடத்திலிருந்து சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ள கார்காசொன்னே (Carcassonne) என்ற இடத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்றதாகவும் இதில் காவல் துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
(செய்திகள் தொடரும்)